பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேர் கைது..!

0 3758

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேடவாக்கத்தில் பள்ளிக்கரணை போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்பொழுது அவர்களின் சட்டை மற்றும் பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா வைத்திருப்பது கண்டு பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் மூவரும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments