மேரிலேண்டின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை பெற்றார் அருணா மில்லர்..!
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றார்.
ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர், சிறு வயதிலேயே குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறினார். இந்த நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
அதேபோல், மேரிலேண்டின் ஆளுநராக அக்கட்சியைச் சேர்ந்த வெஸ் மூர் தேர்வானார்.
Comments