இந்தியாவிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்த நீரவ் மோடியின் மனு தள்ளுபடி

0 3062

இந்தியாவிடம் தன்னை ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து நீரவ் மோடி தொடர்ந்த மனுவை, இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீரவ் மோடி இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

அதனை விசாரித்த நீதிபதிகள், நீரவ் மோடியின் மனோநிலையை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை எனவும், அவரை நாடுகடத்த அனுமதிப்பது அநீதி ஆகாது எனக்கூறியும் மனுவை தள்ளுபடி செய்தனர்.

அடுத்த 14 நாட்களுக்குள், உயர்நீதிமன்றம் அனுமதித்தால் நீரவ் மோடி, இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments