உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்பு...!

0 2423

உச்ச நீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவி ஏற்க உள்ளார்.

தலைமை நீதிபதியாக பதவி வகித்த யு.யு.லலித், நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

அடுத்த 2 ஆண்டுகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments