திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

0 2711

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

திமுக பிரமுகர் மோகன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் சஞ்சய், விக்கி மற்றும் நித்தீஷ் ஆகியோரை திருத்தணி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சஞ்சய் ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் சிறையில் உள்ள நிலையில், ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் விக்கி மற்றும் நித்தீஷ் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments