காரில் கடத்தி செல்லப்பட்ட 8கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

0 2682

கோவை அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 8கோடி ரூபாய் மதிப்பிலான நடராஜர் சிலையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நடராஜர் சிலை சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இருகூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கார் ஒன்றில் கடத்தி வரப்பட்ட மூன்று அடி உயர திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோக சிலையினை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த நபர் உள்ளிட்ட 2பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்   நடராஜர் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments