மதுபோதையில் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 4 பெண்கள்.. போலீசார் வழக்குப்பதிவு.!

0 3641

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில், பெண் ஒருவரை மதுபோதையில் கண்மூடித்தனமாக தாக்கிய 4 பெண்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்தூரின் தேனு சந்தையில் உள்ள பூச்சி மருந்து கடையில் விற்பனையாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி நள்ளிரவில், மதுபோதையில் இருந்த 4 பெண்கள், சாலையில் அவரை சூழ்ந்து தலைமுடியை பிடித்தும், பெல்ட்டால் அடித்தும், தரையில் தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான பெண், தன்னை எந்த காரணமும் இல்லாமல் நால்வரும் தாக்கியதாக போலீசில் புகாரளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments