ரவுடியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த இளைஞர்கள்.. மூன்றே மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை.!

0 10526

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையில், ரவுடியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 3 இளைஞர்களை, மூன்றே மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ரவுடி முருகேசனை, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற 3 இளைஞர்கள், அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சரவணன், பார்த்திபன், வினோத் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பழிக்குபழி வாங்கும் நோக்கில், இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments