பரமக்குடி வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை.. வைகையில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவிப்பு..!

0 3172

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், பரமக்குடி  வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றின் விவசாய பாசனத்திற்கு நீர் பங்கீடு வழங்கும் இடது வலது பிரதான கால்வாய்களில் நீர் கடத்தும் பணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகளவு வரும் மழைநீர் வெள்ளம் ஆறு  வழியே விடப்படும் என்றும் இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ  குளிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments