அரசு மருத்துவர் நடத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவன் ஊசி போட்ட பிறகே இறந்ததாக தந்தை புகார்..!

0 2737

ராஜபாளையத்தில் அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 6 வயது சிறுவன் இறந்ததையடுத்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதையடுத்தே அவன் உயிரிழந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

2 நாள்களுக்கு முன்பு கேஸ்வரனின் 6 வயது மகன் தேவநாதனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அரசு மருத்துவர் பாஸ்கரனுக்கு சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு வந்த பிறகு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது.

இதனால் சிறுவன் தேவநாதனை தென்காசி சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments