மாஞ்சோலை தேயிலை தோட்ட மேலாளர் வாகனத்தில் அதிரடி சோதனை.. அதிக விலை கொண்ட 15 செங்குறிச்சி மரக்கட்டைகள் பறிமுதல்..!
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலை தேயிலை தோட்ட மேலாளர் வாகனத்தில் அரியவகை மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேயிலை தோட்ட மேலாளர் சுபாஷ் என்பவர் வீட்டை காலி செய்து சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றி சென்றார்.
அவரது வாகனத்தில் அதிக விலை மதிப்பு கொண்ட செங்குறிச்சி மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து மணிமுத்தாறு சோதனை சாவடியில் வனத்துறை சோதனை நடத்தினர்.
இதில் சுமார் 15 செங்குறிச்சி கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, மேலாளர் சுபாசுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Comments