"இது நாங்கள் உருவாக்கிய குஜராத்" .. விமர்சிப்பவர்கள் தேர்தலில் காணாமல் போவார்கள் - பிரதமர் மோடி

0 2738

குஜராத்தில் வெறுப்புணர்வை பரப்பும் சக்திகளும், குஜராத்தை அவமதிப்போரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது விரட்டியடிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வல்சாத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இது நாங்கள் உருவாக்கிய குஜராத் என்று புதிய முழக்கத்துடன் உரையை நிகழ்த்தினார் .

கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும், குஜராத்தைப் பற்றிய அவதூறு பரப்புபவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று கூறிய பிரதமர், குஜராத்தில் பாஜக மீண்டும் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments