தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள லிஃப்டில் சிக்கியவர் மீட்பு..!

0 2456

சென்னை அண்ணாநகர் பாடிக்குப்பத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள லிஃப்டில் சிக்கியவர், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்கப்பட்டார்.

272 வீடுகள் உள்ள அந்த குடியிருப்பு பயன்பாட்டிற்கு வந்து, 5 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், வீடுகள் மிகவும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை குடியிருப்பில் உள்ள லிஃப்டில் பாலகிருஷ்ணன் என்பவர் சிக்கிக் கொண்டார்.

பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைக்க வீட்டுவசதி வாரியம்  நிதி ஒதுக்கவில்லை என்ற காரணத்தினால், புனரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments