இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த புகாரில் "தனுஷ்கா குணதிலகா" சிட்னி போலீசாரால் கைது..!
இலங்கை அணி கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த புகாரின் பேரில், சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்ற குணதிலகா, காயம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், டேட்டிங் ஆப் மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி வந்த குணதிலகா, கடந்த புதன்கிழமை ரோஸ் பே நகரில் அவரை சந்தித்ததாகவும், அப்போது அவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், சிட்னி போலீசார் குணதிலகாவை கைது செய்தனர்.
Comments