தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட இளைஞர் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே தமிழக முதலமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்த பூபதி என்பவர் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் தமிழக முதலமைச்சர் பற்றி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ குறித்த புகாரின் பேரில் திருநின்றவூர் போலீசார் பூபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments