கன்றுக்காக பாசப்போராட்டம்.. குட்டிக்காக 2 கி.மீ தூரம் ஆட்டோவை துரத்தி பிடித்து மறித்த பசு..!

0 7903
கன்றுக்காக பாசப்போராட்டம்.. குட்டிக்காக 2 கி.மீ தூரம் ஆட்டோவை துரத்தி பிடித்து மறித்த பசு..!

நாகப்பட்டினத்தில் ஈன்றெடுத்த கன்றுக்காக பாசப்போராட்டம் நடத்திய பசுவின் தாயன்பு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகையைச் சேர்ந்த கணேசனின் பசுமாடு கடற்கரை சாலையில் கன்று ஈன்றது. இதனையடுத்து, ஆட்டோவில் கன்றுவை ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.

தனது சேயை பிரித்து எடுத்துச் செல்கிறார்களே என்ற பதைபதைப்பில் அந்த ஆட்டோவின் பின்னாலேயே பசு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடியது.

இடையே ஆட்டோவையும் மறித்தது. இந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்ட நிலையில், பசுவின் நேசம் எவ்வளவு உயர்வானது என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments