அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

0 3949
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அவை தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments