மயிலாடுதுறை கோயில்களில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.. சதாபிஷேகம் செய்துக் கொண்ட சுவிட்சர்லாந்து தம்பதியினர்..!

0 3519
மயிலாடுதுறை கோயில்களில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்.. சதாபிஷேகம் செய்துக் கொண்ட சுவிட்சர்லாந்து தம்பதியினர்..!

மயிலாடுதுறை மாவட்ட கோயில்களில் ஜப்பான், சுவிட்சர்லாந்து நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக டாக்டர் தக்காயுகி ஹோஷி தலைமையில் மயிலாடுதுறை வந்திருந்த 16 ஜப்பானியர்கள் மயூரநாதர் கோயிலில் ஹோமங்களை நடத்தி வழிபட்டனர். அப்போது நெற்றியில் விபூதி பூசியும், தரையில் விழுந்தும் சாமி கும்பிட்டனர்.

இதேப்போன்று, சுவிட்சர்லாந்தை நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன்-ஜானத் தம்பதியினர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். சதாபிஷேகம் கண்ட தம்பதியினரிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments