பெண்களிடம் முகவரி கேட்பது போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது..!

0 3006

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்  வாகன சோதனையின் போது காவல்துறையிடம் சிக்கினான்.

ராசிபுரம் எல்லப்பா தெருவை சேர்ந்த வளர்மதியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் , முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை  பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற  சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

ராசிபுரம் குற்றப்பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகன  சோதனையின் போது சிக்கிய சேலம் பகுதியை சேர்ந்த டைய்லர் கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பேசியதில் சந்தேகம் எழுந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் வாகன எண்ணை சோதித்த போது அது போலி என்பதும் இந்த வாகனம் ஓமலூர் பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது .

ராசிபுரம் பகுதியில் ஒரு வாரமாக நோட்டமிட்டு செயின் பருப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பறிக்கப்பட்ட தங்கத் தாலி மற்றும்  சையின் பறிப்புக்கு உபயோகப்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் ஆகியவற்றை ராசிபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments