முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கார் மீது கல்வீசித் தாக்குதல்..!

0 2536

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடைபெற்றது.

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்ள தமது பாதுகாப்பு வாகனங்களுடன் நாயுடு சென்றுக் கொண்டிருந்த போது, என.டி.ஆர் மாவட்டம் நந்திகர்மா என்ற இடத்தில் அவர் கார் மீது கற்கள் வீசப்பட்டன.

இதில் அவருடைய பிரதான பாதுகாவலர் மது என்பவர் காயம் அடைந்தார். ஆயினும் சந்திரபாபு நாயுடு காயமின்றி தப்பினார், உடனே அருகில் இருந்த நபரிடம் மைக்கை வாங்கிய சந்திரபாபு நாயுடு கல்வீசியவர்களுக்கு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments