சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.5 லட்சம், முறைகேடாக பதிவு செய்த பத்திரங்கள் பறிமுதல்..!

0 4266

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில்  கணக்கில் வராத 5லட்சம் ரூபாய் பணம் மற்றும் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4பேர் மற்றும் இடைதரகர்கள் 6பேர் உட்பட 11பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரணியல் சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளரை கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவி சார்பதிவாளராக பணியாற்றும் சுப்பையா என்பவரை வாய்மொழி உத்தரவாக பொறுப்பு சார்பதிவாளராக நியமித்து பத்திரப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments