வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!

0 2876

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மாமியார் மற்றும் கணவன் கைது செய்யப்பட்டனர்.

விஜய் - விஜயலட்சுமி தம்பதி கோவையில் ஒன்றாக வேலை பார்த்து வந்த போது காதலித்து, 3 ஆண்டுகளுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்டனர்.

கடந்த மாதம் பெண்ணாடத்திற்கு குடிபெயர்ந்தனர் அப்போதிலிருந்து மாமியார், வரதட்சணை கேட்டும்,விஜயலட்சுமியின் சாதியை சுட்டிக்காட்டியும் கொடுமைப்படுத்தி வந்ததால் மனமுடைந்த விஜயலட்சுமி, தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார் இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் விஜயலட்சுமியின் ஒன்றரை வயது குழந்தை தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments