காரில் சாய்ந்து நின்றதாக ஆறு வயது சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர் கைது..!

0 3524

கேரளாவில் காரில் சாய்ந்து நின்றதாக ஆறு வயது சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர் சிசிடிவிக் காட்சி ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டார்.

தலசேரி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றதால் ஆத்திரத்தில் கார் உரிமையாளரான சிஷாத் என்ற இளைஞர், சிறுவனை காலால் எட்டி உதைத்தார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிஷாத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தலச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுவனை தாக்கியதாக கூறி சிஷாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments