அதிமுக ஆட்சியில் வடிகால் தூர்வாரபடாததே மழைநீர் தேங்க காரணம் - அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு!

0 2795

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வடிகால் தூர்வாரபடாததே சென்னையில் தண்ணீர் தேங்க காரணமென்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி அம்பேத்கர் நகர் பகுதியில் மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் கே.என் நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் சென்னையில் மழைநீர் வடிந்து விட்டதாக தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதி கன்னீத்தீவு போல இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அவர் செல்லும் கன்னீத்தீவு வேறு, இது அல்ல என அமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments