வெள்ளசேதம் ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறும் - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

0 2862
வெள்ளசேதம் ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் நடைபெறும் - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளபாதிப்பு ஏற்பட்டாலும் தங்கு தடையின்றி பால் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை பெய்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில்  அனைத்து துறை அலுவலர்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக தனியார் தொழிற்சாலை தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சருடன், வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments