டெல்டா மாவட்டங்கள் உட்பட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0 6004

தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் உட்பட 6 மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என, வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments