உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்..!

0 3561

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 75 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்கத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த இளைஞரின் பைபை ரயில்வே போலீசார் சோதனையிட்ட போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரித்த போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சோவிக் மண்டல் என்ற அந்த இளைஞர், தான் வேலை பார்த்து வரும் நகைக்கடை உரிமையாளர், சென்னை பூக்கடையில் உள்ள நகைக்கடையில் பணத்தை கொடுத்து நகை வாங்கி வர சொல்லி அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.

அது ஹவாலா பணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments