மார்க்கெட் பகுதியில் வைத்து பிரியாணி கடை உரிமையாளர் வெட்டி படுகொலை..!

0 5357

சென்னையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த மார்க்கெட் பகுதியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அரும்பாக்கத்தைச் சேர்ந்த நாகூர்கனி அயனாவரம் மார்க்கெட் சாலையில் பிரியாணி கடை நடத்தி வந்தார்.

நேற்றிரவு பிரியாணி செய்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல், நாகூர்கனியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments