கார் வெடிப்பு சம்பவம் - குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!

0 3471

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக, என்ஐஏ அதிகாரிகள் உத்தரவின்பேரில், கோவை மாநகர போலீசார்
உக்கடம் பகுதியிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் சோதனை நடத்தினர்.

கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு,கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பில் ஜமேஷா முபின் பலியான நிலையில், அவரது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

உபா சட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments