ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

0 3212
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக இருப்பதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக ஹேமந்த் சோரன் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்கஜ் மிஸ்ரா வீட்டில் ஹேமந்த் சோரன் கையெழுத்திட்ட காசோலைகள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக அமலாக்கத்றை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments