மயக்க மருந்து கொடுத்து 10 சவரன் நகையை கொள்ளையடித்த தம்பதி கைது..!

0 2314

திருவள்ளூரில் கடந்த மாதம் மயக்க மருந்து கொடுத்து நகையை கொள்ளையடித்த ஆந்திர தம்பதியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

தாவுதுக்கான் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் சுசீலா என்பவரிடம் கடந்த அக்டோபர் 2ம் தேதி ஆந்திராவை சேர்ந்த கணேசன், லட்சுமி தம்பதிகள் கட்டுமான தொழில் செய்வதாகவும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்ற கேட்டு குடிவந்துள்ளனர்.

சுசீலா குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்த அவர்கள் கடந்த 12ம் தேதி சுசீலா பால் காய்ச்சி தருமாறு தெரிவித்த நிலையில் அதனை பயன்படுத்தி பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆந்திராவிற்கு சென்று கைது செய்த போலீசார் 10 சவரன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments