நீச்சல் போட்டிக்கு யார் வர்ரா..? டென் தவுசன்..! டென் தவுசன்..! குழந்தை பருவத்துக்கே சென்றார்

0 4618

சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சாலையில் தேங்கிய  மழை வெள்ளத்தில், மதுப்பிரியர் ஒருவர் மல்லாக்கப்படுத்து, நீச்சல் அடித்து மகிழ்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது

விடிந்த பின்னரும் கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.

மழை நீரை பார்த்ததால் குதூகலமடைந்த மதுப்பிரியர் ஒருவர், சாலையை நீச்சல் குளமாக நினைத்து குழந்தை பருவத்துக்கே சென்று, நீந்த தொடங்கினார்.

நீரில் மூழ்கியும், மல்லாக்கப்படுத்துக் கிடந்தும் தனது நீச்சல் திறமையை அவர் இந்த உலகத்தினருக்கு உணர்த்தினார்.

வாகனங்கள் தண்ணீரை கிழித்துக்கொண்டு செல்லும் போது, அலையில் மிதந்துவரும் வாத்து போல,  நீருக்குள் அமர்ந்து கொண்டார் அந்த வாட்டர் டேக்கர்.

அந்த வழியாக நடந்து சென்ற பெண்களிடம் வம்பிழுத்தபடி, நீருக்குள் நீண்ட நேரம் உருண்டும், புரண்டும், தவமிருந்த குடிகார பித்தர், போதை இறங்கியதும் எழுந்து சென்றுவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments