சென்னையில் கனமழையால் போக்குவரத்து மாற்றம் - கணேசபுரம் சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடல்..!

0 5813
சென்னையில் கனமழையால் போக்குவரத்து மாற்றம் - கணேசபுரம் சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை மூடல்..!

சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழை நீர் பெருக்கால் கணேசபுரம் சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையும் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த சுரங்கப்பாதை வழியே செல்லும் மாநகரப் பேருந்துகள், ஸ்டராகான்ஸ் சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு பெரம்பூர் மார்க்கமாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments