"டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்தேன்".. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவிப்பு..!

0 4410
"டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்தேன்".. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவிப்பு..!

ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக பணமோசடி வழக்கில் கைதாகி சிறையிலுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு  எழுதிய கடிதத்தில்,  திகார் சிறையில் தாம் மிரட்டப்பட்டதாகவும், தீவிரமாக கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், இதிலிருந்து பாதுகாப்பு தர சத்யேந்திர ஜெயினுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

  இதை சுட்டிக்காட்டியுள்ள பாஜக, ஆம் ஆத்மிக்கு மாநிலங்களவைக்கு நியமிப்பது உள்ளிட்டவற்றுக்காக 60 கோடி ரூபாயை சுகேஷ் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இக்குற்றச்சாட்டை பொய் என்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments