வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய மாநகர பேருந்து - பயணிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

0 6602
வியாசர்பாடி சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய மாநகர பேருந்து - பயணிகளை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!

சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாதையில் குளம் போல் தேங்கிய மழை நீரில், மாநகர பேருந்து சிக்கிக் கொண்டது.

மணலியில் இருந்து பிராட்வே நோக்கி பயணிகளுடன் சென்ற 64c என்ற மாநகர பேருந்து, சுரங்கப்பாதை வழியாக சென்ற போது, அதிகளவில் மழை நீர் தேங்கியிருந்ததால், உள்ளேயே சிக்கிக் கொண்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இடுப்பளவு நீரில் நடந்து சென்று பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட 20க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், கிரேன் மூலம் பேருந்து மீட்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments