மின்கட்டணமாக ரூ.91,130 ரூபாய் செலுத்த வேண்டுமென குறுஞ்செய்தி.. அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர்..!

0 3782
மின்கட்டணமாக ரூ.91,130 ரூபாய் செலுத்த வேண்டுமென குறுஞ்செய்தி.. அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர்..!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டுமென வீட்டு உரிமையாளருக்கு மின்சார வாரியத்தால் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

துலுக்கர்பட்டியில்   2 அறைகளை மட்டுமே கொண்ட பசுமை வீட்டில் வசிக்கும் முகமது பாத்து  செல்போன் எண்ணுக்கு  91 ஆயிரத்து 130 ரூபாய் செலுத்த வேண்டுமென குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதற்கு முன்பு  65 ரூபாய் மட்டுமே செலுத்திய நிலையில், அதை விட பல ஆயிரம் அதிகமாக கட்டணம் வந்ததால்  நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.

அப்போது  தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறு நிகழ்ந்திருக்கலாம், 2 நாளில் சரியான ரசிது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறி, மின்வாரிய ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதையடுத்து   122 ரூபாய் என புதிதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments