பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர், தரகர் கைது..!

0 3171

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலஅளவையர், தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திவ்யதர்ஷன் என்பவர் தனது தாயார் பெயரில் உள்ள நிலத்துக்கு பட்டா கேட்டு நகராட்சி அலுவலக நிலஅளவையர் சரவணனை அணுகிய போது தரகர் மணி மூலம் பட்டா மாறுதலுக்கு 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திவ்யதர்ஷன் சிவகங்கை லஞ்சஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்ததை அடுத்து அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மணி மூலம் சரவணனிடம் கொடுத்தார். அதனைப் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments