ஹாலோவீன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலி..!

0 3451

தென்கொரியாவில், ஹாலோவீன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 153-ஆக அதிகரித்துள்ளது. 

சியோலில் உள்ள இட்டாவோன் பகுதியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

பிரதான வீதியை ஒட்டிய குறுகிய சந்துகளில் முண்டியடித்து கொண்டு சென்றபோது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு சாலையில் வைத்து மருத்துவக்குழுவினர் முதலுதவி அளித்தனர்.  

சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்த தென்கொரிய அதிபர் Yoon Suk-yeol, ஒருநாள் தேசிய துக்கம் கடைபிடிக்கப்படுமெனவும் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments