வடமாநில தொழிலாளியின் 6 மாத பெண் குழந்தை கடத்தல்.. புகாரளித்த 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்..!

0 3078

ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளியின் 6 மாத பெண் குழந்தையை, புகாரளித்த 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

மகாதேவபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக, வாரணாசியிலிருந்து ஓசூருக்கு நேற்று இரவு வந்த ராம்கேவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேருந்து நிலையத்தில் தூங்கியுள்ளார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாததால் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆட்டோ ஓட்டுநர் ராஜா என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் இராயக்கோட்டை சாலையில் குழந்தையுடன் சென்ற ராஜேஸ்வரி என்ற பெண்ணை பிடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments