பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக்கொலை..!

0 3454

திருச்சி அருகே பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாக சாலையில், நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர்.

இறந்த நபர் மணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த சின்னராசு என்பது தெரியவந்தது. பெண் விவகாரத்தில் இந்த கொடூர கொலை அரங்கேறி உள்ளதாகத் தெரிவித்த போலீசார், வழக்கு தொடர்பாக புல்லட் ராஜா என்பவரைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments