அயன் பட பாணியில் திருச்சி விமானநிலையத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்..!

0 3691

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த ஏர்லங்கன் விமானத்தில் பயணித்த, சந்தேகத்திற்கிடமான 2 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவரும் தங்களது உடை மற்றும் வீடியோ கேம் விளையாட பயன்படுத்தும் சாதனங்களில் மறைத்து, தகடு வடிவிலான முலாம் பூசப்பட்ட ஆயிரத்து 343 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments