பள்ளி வேனை வழி மறித்து மதுபோதையில் தகராறு..!

0 3720

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பள்ளி வாகனத்தை வழி மறித்து மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நென்மேனி கிராமத்தில் மாணவர்களை இறக்கிவிடச் சென்ற பள்ளி வேனை வழிமறித்த சிலர், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாகனத்தை கற்களால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால், வேனில் இருந்த மாணவர்கள் அச்சமடைந்த நிலையில், தகராறில் ஈடுபட்டவர்களை அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலையச்செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments