பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போது திடீரென தவறி குப்புற விழுந்த மாணவன்

0 3070

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அரசு மினி பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் திடீரென தவறி குப்புற விழுந்த காட்சி வெளியாகியுள்ளது.

ஆவடியில் இருந்து சஞ்சீவ் நகரை நோக்கி சென்ற பேருந்தில், சில மாணவர்கள் விதிக்கு புறம்பாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். அதில் ஒரு மாணவர், கால்களை தரையில் தேய்த்தவாறு சென்ற நிலையில், கைபிடி நழுவி தரையில் குப்புற விழுந்தார்.

இந்த காட்சியை பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments