அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய இந்திய மாணவர்கள் 3 பேர் பலி..!

0 3966

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேற்கு மாசாசூசெட்ஸில் இந்திய மாணவர்கள் சென்ற கார், மற்றொரு வாகனம் மீது மோதி விபத்து நேரிட்டது.

படுகாயம் அடைந்த மேலும் 4 இந்திய மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் 27 வயதான பிரேம் குமார் ரெட்டி கோடா, 22 வயதான பவானி குல்லப்பள்ளி மற்றும் 22 வயதான சாய் நரசிம்ம செட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments