அரசு பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 10ஆம் வகுப்பு மாணவர் படுகாயம்..!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில், 10ஆம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்தார்.
தலையில் பலத்த காயமடைந்த தயாளன் என்கிற மாணவரை மீட்ட ஆசிரியர்கள், நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே, பழுதடைந்த கட்டடங்களை உடனடியாக இடித்துவிட்டு, புதிய பள்ளி கட்டடம் கட்டித்தர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments