தொழில்போட்டி காரணமாக மீன் வியாபாரியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி..!

0 2560

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தொழில்போட்டி காரணமாக மீன் வியாபாரியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்.என்.காலனியை சேர்ந்த முருகன், மணி ஆகிய இரண்டு பேரும் சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்,  பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரையும் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், தகராறில் ஈடுபட்டு கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments