ஈரானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 15 பேர் பலி ; 2 பேர் கைது..!

0 3133
ஈரானில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 15 பேர் பலி ; 2 பேர் கைது..!

ஈரானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் புனித தலத்தில் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் வந்த பயங்கரவாதிகள் ஆலய நுழைவாயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், பெண்கள்-குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரில் இருவரை கைது செய்த போலீசார், மூன்றாவது நபரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments