ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய அமைச்சர் சா.மு. நாசர்

0 2503

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்து, விதியை மீறுவோரிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்படும் நிலையில், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டி வந்த காட்சி வைரலாகி வருகிறது.

பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மேயர் உதயகுமார்  ஆய்வு செய்தனர்.

பின்னர் மேல் கண்டிகை, கீழ் கண்டிகை பகுதிகளில் கரை அமைப்பது குறித்து  இரு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டனர். அப்போது அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments