ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. தற்கொலைக்கு முன் பெற்றோருக்கு உருக்கமான வாய்ஸ் மெசேஜ்..!
விளாத்திக்குளம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனில் சிக்கியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர், முன்னதாக மன்னித்து விடுங்கள் என்று உருக்கமாக பேசி, பெற்றோருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகியுள்ளது.
ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பூபதிராஜா என்ற இளைஞர், அப்பகுதியிலுள்ள தனியார் பவர் பிளாண்டில் வேலை செய்து வந்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான பூபதிராஜா, வாய்ஸ் மெசேஜில் கூறிய தகவல்படி, ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிகிறது.
Comments