பணியில் இருந்த ரயில்வே போலீசாரை தாக்கி, வாக்கிடாக்கியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்..!

0 3635

மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரை தாக்கி, வாக்கிடாக்கியை உடைத்த 4 இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறை ஜங்ஷனில் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றும் பக்கிரிசாமிக்கும் தீபாவளி அன்று இரவு ஒன்றாவது பிளாட்பாரத்தில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்த 4பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர்கள் பக்கிரிசாமியின் வாக்கிடாக்கியை பிடுங்கி உடைத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் அங்கிருந்த சிசிடிவி உதவியுடன் போலீசார் 3பேரை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments